search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னிப்பூ சாகுபடி"

    • சானல்கள் தூர்வாரும் பணி தீவிரம்
    • முக்கடல் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது

    நாகர்கோவில்,ஜூலை.12-

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையும் திறக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வந்ததையடுத்து பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. ஒரு வாரமாக பெய்த மழையை யடுத்து பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அணையில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட்டு முறையில் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.38 அடியாக உள்ளது. அணைக்கு 394 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 641 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெரு ஞ்சானி அணை நீர்மட்டம் 30.90 அடியாக உள்ளது. அணை 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சணி அணைகளில் உள்ள வெளியேற்றப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை முறையாக வந்து சேரவில்லை என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடைமடை பகுதிகளில் உள்ள சானல்கள் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சானலில் உள்ள முட் புதர்களை அப்பு றப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 14.60 அடியாக உள்ளது.

    ×